பச்சை மயில் வாஹனனே
சிவ பாலசுப்ர மணியனே வா
என் இச்சையெல்லாம் உன்மேலே வைத்தேன்
எள்ளளவும் பயமில்லயே
அலைகடல் ஓரத்திலே – எங்கள்
அன்பான சண்முகனே
அலையா மனம் தந்தாய் – உனக்கு
அனந்த கோடி நமஸ்காரம்.
கொச்சை மொழியானாலும் – உன்னை
கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்
இங்கு சர்ச்சை எல்லாம் மறைந்ததப்பா – எங்கும்
சாந்தி நிலவுதப்பா
வெள்ளம் அது பள்ளந்தனிலே – பாயும்
தண்ணி போல் உள்ளந்தனிலே – நீ
மெல்ல மெல்ல புகுந்து விட்டாய் – எந்தன்
கள்ளமெல்லாம் கரைந்ததப்பா
நெஞ்சமதில் கோயில் அமைத்தேன்– அங்கு
நேர்மையெனும் தீபம் வைத்தேன்
செஞ்சிலம்பு கொஞ்சும் வேலா – முருகா
சேவல் கொடி மயில் வீரா
செந்தூர் கடலோரம்
முருகா சிங்கார மயில்வாகனா
செந்தூர பொட்டழகா
உந்தன் சேவடியில் நான் சரணம்..
No comments:
Post a Comment