Tuesday, January 18, 2022

பச்சை மயில் வாஹனனே - Pachai mayil vaganane siva balasubramanyane va..

 பச்சை மயில் வாஹனனே

சிவ பாலசுப்ர மணியனே வா

என் இச்சையெல்லாம் உன்மேலே வைத்தேன்

எள்ளளவும் பயமில்லயே


அலைகடல் ஓரத்திலே – எங்கள்

அன்பான சண்முகனே 

அலையா மனம் தந்தாய் – உனக்கு

அனந்த கோடி நமஸ்காரம்.


கொச்சை மொழியானாலும் – உன்னை

கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்

இங்கு சர்ச்சை எல்லாம் மறைந்ததப்பா – எங்கும்

சாந்தி நிலவுதப்பா 


வெள்ளம் அது பள்ளந்தனிலே – பாயும்

தண்ணி போல் உள்ளந்தனிலே – நீ

மெல்ல மெல்ல புகுந்து விட்டாய் – எந்தன்

கள்ளமெல்லாம் கரைந்ததப்பா


நெஞ்சமதில் கோயில் அமைத்தேன்– அங்கு

நேர்மையெனும் தீபம் வைத்தேன்

செஞ்சிலம்பு கொஞ்சும் வேலா – முருகா

சேவல் கொடி மயில் வீரா


செந்தூர் கடலோரம் 

முருகா சிங்கார மயில்வாகனா

செந்தூர பொட்டழகா 

உந்தன் சேவடியில் நான் சரணம்..



No comments:

Post a Comment