Wednesday, October 5, 2016

கிளிப்பாட்டு - தெய்வப் பாடல்கள்

கிளிப்பாட்டு

    திருவைப் பணிந்து நித்தம் செம்மைத் தொழில் புரிந்து
    வருக வருவதென்றே - கிளியே! - மகிழ்வுற் றிருப்போமடி!

    வெற்றி செயலுக் குண்டு விதியின் நியமமென்று,
    கற்றுத் தெளிந்த பின்னும் - கிளியே! - கவலைப் படலாகுமோ?

    துன்ப நினைவுகளும் சோர்வும் பயமு மெல்லாம்
    அன்பில் அழியுமடீ! - கிளியே! - அன்புக் கழிவில்லை காண்!

    ஞாயிற்றை யெண்ணி யென்றும் நடுமை நிலை பயின்று,
    ஆயிர மாண் டுலகில் - கிளியே! - அழிவின்றி வாழ்வோமடீ!

    தூய பெருங்கனலைச் சுப்பிர மண்ணி யனை
    நேயத்துடன் பணிந்தால் - கிளியே! நெருங்கித் துயர் வருமோ?

No comments:

Post a Comment