Thursday, October 6, 2016

தெய்வப் பாடல்கள் - சக்திக் கூத்து

சக்திக் கூத்து

    ராகம் - பியாக்

    பல்லவி

    தகத் தகத் தகத் தகதகவென் றோடோமோ? - சிவ
    சக்தி சக்தி சக்தி சக்தியென்று பாடோமோ? (தகத்)

    சரணங்கள்

    அகத்தகத் தகத்தினிலே உள்நின்றாள் - அவள்
    அம்மை யம்மை எம்மைநாடு பொய்வென்றாள்
    தகத்தக நமக் கருள் புரிவாள் தாளொன்றே
    சரண மென்று வாழ்த்திடுவோம் நாமென்றே. (தகத்)

    புகப்புகப் புக வின்பமடா போதெல்லாம்
    புறத்தினிலே தள்ளிடுவாய் சூதெல்லாம்
    குகைக்கு ளங்கே யிருக்குதடா தீபோலே - அது
    குழந்தையதன் தாயடிக்கீழ் சேய்போலே. (தகத்)

    மிகத்தகைப்படு களியினிலே மெய்சோர - உன்
    வீரம்வந்து சோர்வை வென்று கைதேர
    சகத்தினிலுள்ளே மனிதரெல்லாம் நன்றுநன்றென -நாம்
    சதிருடனே தாளம் இசை இரண்டு மொன்றொன (தகத்)

No comments:

Post a Comment