Thursday, October 6, 2016

தெய்வப் பாடல்கள் - இறைவா! இறைவா!

இறைவா! இறைவா!

    பல்லவி

    எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - எங்கள்
    இறைவா! இறைவா! இறைவா! (ஓ - எத்தனை)

    சரணங்கள்

    சித்தினை அசித்துடன் இணைத்தாய் -அங்கு
          சேரும்ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்.
    அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
          மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய். (ஓ- எத்தனை)

    முக்தியென் றொருநிலை சமைத்தாய் - அங்கு
          முழுதினையு முணரும் உணர் வமைத்தாய்
    பக்தியென் றொரு நிலை வகுத்தாய் - எங்கள
          பரமா! பரமா! பரமா! (ஓ - எத்தனை)

No comments:

Post a Comment