Wednesday, October 5, 2016

தெய்வப் பாடல்கள் - கண்ணம்மாவின் நினைப்பு

கண்ணம்மாவின் நினைப்பு

    பல்லவி

    நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி - கண்ணம்மா!
    தன்னையே சசியென்று சரணமெய்தினேன்! (நின்னையே)

    சரணங்கள்

    பொன்னை யே நிகர்த்த மேனி மின்னையே, நிகர்த்த சாயற்
    பின்னை யே! நித்ய கன்னியே! கண்ணம்மா! (நின்னையே)

    மார னம்புக ளென்மீது வாரி வாரிவீச நீ-கண்
    பாரா யோ? வந்து சேரா யோ? கண்ணம்மா! (நின்னையே)

    யாவு மே சுக முனிக் கொர் ஈசனா மெனக்குன் தோற்றம்
    மேவு மே - இங்கு யாவுமே, கண்ணம்மா! (நின்னையே)

No comments:

Post a Comment