Wednesday, October 5, 2016

தெய்வப் பாடல்கள் - மஹாசக்தி

மஹாசக்தி

    சந்திர னொளியில் அவளைக் கண்டேன்,
    சரண மென்று புகுந்து கொண்டேன்,
    இந்திரி யங்களை வென்று விட்டேன்,
    எனதென் ஆசையைக் கொன்று விட்டேன்.

    பயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள்,
    பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்,
    துயரி லாதெனைச் செய்து விட்டாள்,
    துன்ப மென்பதைக் கொய்து விட்டாள்.

    மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்,
    வீசி நிற்கும் வளியைச் செய்தாள்,
    வான்க ணுள்ள வெளியைச் செய்தாள்,
    வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள்.

No comments:

Post a Comment