Wednesday, October 5, 2016

தெய்வப் பாடல்கள் - சூரிய தரிசனம்

சூரிய தரிசனம்

    ராகம் - பூபாளம்

    சுருதி யின்கண் முனிவரும் பின்னே
          தூமொ ழிப்புல வோர்பலர் தாமும்
    பெரிது நின்றன் பெருமையென் றேத்தும்
          பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன்;
    பரிதியே! பொருள் யாவிற்கும் முதலே!
          பானுவே! பொன்செய் பேரொளித் திரளே!
    கருதி நின்னை வணங்கிட வந்தேன்;
          கதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே.

    வேதம் பாடிய சோதியைக் கண்டு
          வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்;
    நாத வார்கட லின்னொலி யோடு
          நற்ற மிழ்ச்சொல் இசையையுஞ் சேர்ப்பேன்;
    காத மாயிரம் ஓர்கணத் துள்ளே
          கடுகியோடும் கதிரினம் பாடி
    ஆத வா! நினை வாழ்த்திட வந்தேன்
          அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே.

No comments:

Post a Comment