Wednesday, October 5, 2016

தெய்வப் பாடல்கள் - கண்ண பெருமானே

கண்ண பெருமானே

    காயிலே புளிப்பதென்னே? கண்ண பெருமானே - நீ
    கனியிலே இனிப்பதென்னே? கண்ண பெருமானே - நீ
    நோயிலே படுப்பதென்னே? கண்ண பெருமானே - நீ
    நோன்பிலே உயிர்ப்பதென்னே? கண்ண பெருமானே - நீ

    காற்றிலே குளிர்ந்ததென்னே? கண்ண பெருமானே - நீ
    கனலிலே சுடுவதென்னே? கண்ண பெருமானே - நீ
    சேற்றிலே குழம்பலென்ன? கண்ண பெருமானே - நீ
    திக்கிலே தெளிந்ததென்னே? கண்ண பெருமானே - நீ

    ஏற்றிநின்னைத் தொழுவதென்னே? கண்ண பெருமானே - நீ
    எளியர் தம்மைக் காப்பதென்னே? கண்ண பெருமானே - நீ
    போற்றினாரைக் காப்பதென்னே? கண்ண பெருமானே - நீ
    பொய்யர் தம்மை மாய்ப்பதென்னே? கண்ண பெருமானே நீ

    வேறு
    போற்றி! போற்றி! போற்றி! போற்றி!
    கண்ண பெருமானே! நின்
    பொன்னடி போற்றி நின்றேன்,
    கண்ண பெருமானே!

No comments:

Post a Comment