கிளிப்பாட்டு
திருவைப் பணிந்து நித்தம் செம்மைத் தொழில் புரிந்து
வருக வருவதென்றே - கிளியே! - மகிழ்வுற் றிருப்போமடி!
வெற்றி செயலுக் குண்டு விதியின் நியமமென்று,
கற்றுத் தெளிந்த பின்னும் - கிளியே! - கவலைப் படலாகுமோ?
துன்ப நினைவுகளும் சோர்வும் பயமு மெல்லாம்
அன்பில் அழியுமடீ! - கிளியே! - அன்புக் கழிவில்லை காண்!
ஞாயிற்றை யெண்ணி யென்றும் நடுமை நிலை பயின்று,
ஆயிர மாண் டுலகில் - கிளியே! - அழிவின்றி வாழ்வோமடீ!
தூய பெருங்கனலைச் சுப்பிர மண்ணி யனை
நேயத்துடன் பணிந்தால் - கிளியே! நெருங்கித் துயர் வருமோ?
No comments:
Post a Comment