Wednesday, October 5, 2016

தெய்வப் பாடல்கள் - ஆறு துணை

ஆறு துணை

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - பரா சக்தி
    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.
    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி - ஓம் சக்தி
    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.

    கணபதி ராயன் - அவனிரு
          காலைப் பிடித் திடுவோம்;
    குண முயர்ந் திடவே - விடுதலை
          கூடி மகிழ்ந் திடவே. (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

    சொல்லுக் கடங்காவே - பரா சக்தி
          சூரத் தனங்க ளெல்லாம்;
    வல்லமை தந்திடுவாள் - பரா சக்தி
          வாழி யென்றே துதிப்போம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

    வெற்றி வடிவேலன் - அவனுடை
          வீரத்தினைப் புகழ்வோம்,
    சுற்றி நில்லாதே போ! - பகையே!
          துள்ளி வருகுது வேல். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

    தாமரைப் பூவினிலே - சுருதியைத்
          தனியிருந் துரைப்பாள்
    பூமணித் தாளினையே கண்ணி லொற்றிப்
          புண்ணிய மெய்திடுவோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

    பாம்புத் தலைமேலே - நடஞ் செயும்
          பாதத்தினைப் புகழ்வோம்;
    மாம்பழ வாயினிலே - குழலிசை
          வண்மை புகழ்ந்திடு வோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

    செல்வத் திருமகளைத் - திடங்கொண்டு
          சிந்தனை செய்திடுவோம்;
    செல்வ மெல்லாந் தருவாள் - நம தொளி
          திக்க னைத்தும் பரவும் ஓம் சக்தி. (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

No comments:

Post a Comment