Wednesday, October 5, 2016

தெய்வப் பாடல்கள் - காளி ஸ்தோத்திரம்

காளி ஸ்தோத்திரம்

    யாது மாகி நின்றய் - காளி! எங்கும் நீநி றைந்தாய்,
    தீது நன்மை யெல்லாம் - நின்றன் செயல்க ளன்றி யில்லை.
    போதும் இங்கு மாந்தர் - வாழும் - பொய்ம்மை வாழ்க்கையெல்லாம்!
    ஆதி சக்தி, தாயே! - என்மீது - அருள் புரிந்து காப்பாய்.

    எந்த நாளும் நின்மேல் - தாயே! இசைகள் பாடி வாழ்வேன்;
    கந்தனைப்ப யந்தாய் - தாயே! கருணை வெள்ளமானாய்
    மந்த மாரு தத்தில் - வானில் - மலையி னுச்சி மீதில்
    சிந்தை யெங்கு செல்லும் - அங்குன் - செம்மை தோன்றும் அன்றே!

    கர்ம யோகமென்றே - உலகில் - காக்கு மென்னும் வேதம்,
    தர்ம நீதி சிறிதும் - இங்கே - தவற லென்ப தின்றி,
    மர்ம மான பொருளாம் - நின்றன் - மலர டிக்கண் நெஞ்சம்,
    செம்மை யுற்று நாளும் - சேர்ந்தே - தேசு கூட வேண்டும்.

    என்ற னுள்ள வெளியில் - ஞானத் - திரவி யேற வேண்டும்,
    குன்ற மொத்த தோளும் - மேருக் - கோல மொத்த வடிவும்,
    நன்றை நாடு மனமும் - நீயெந் - நாளு மீதல் வேண்டும்,
    ஒன்றை விட்டு மற்றோர் - உழலும் நெஞ்சம் வேண்டா.

    வான கத்தி னொளியைக் - கண்டே - மனம கிழ்ச்சி பொங்கி,
    யானெ தற்கும் அஞ்சேன் - ஆகி - எந்த நாளும் வாழ்வேன்,
    ஞான மொத்த தம்மா! - உவமை நானு ரைகொ ணாதாம்.
    வான கத்தி னொளியின் - அழகை வாழ்த்து மாறி யாதோ?

    ஞாயி றென்ற கோளம் - தருமோர் - நல்ல பேரொ ளிக்கே
    தேய மீதோர் உவமை - எவரே - தேடி யோத வல்லார்?
    வாயி னிக்கும் அம்மா! - அழகாம் - மதியின் இன்ப ஒளியை
    நேயமோ டுரைத்தால் - அங்கே - நெஞ்சி ளக்க மெய்தும்.

    காளி மீது நெஞ்சம் என்றும் - கலந்து நிற்க வேண்டும்,
    வேளை யொத்த விறலும் - பாரில் - வெந்த ரேத்து புகழும்,
    யாளி யொத்த வலியும் - என்றும் - இன்பம் நிற்கும் மனமும்,
    வாழி யீதல் வேண்டும் அன்னாய் - வாழ்க நின்றன் அருளே!

No comments:

Post a Comment