Wednesday, October 5, 2016

தெய்வப் பாடல்கள் - திருக்காதல்

திருக்காதல்

    திருவே! நினைக்காதல் கொண் டேனே - நினது திரு
    உருவே மறவாதிருந் தேனே - பல திசையில்
    தேடித் திரிந்திளைத் தேனே - நினக்கு மனம்
    வாடித் தினங்களைத் தேனே - அடி, நினது
    பருவம் பொறுத்திருந் தேனே - மிகவும் நம்பிக்
    கருவம் படைத்திருந் தேனே - இடை நடுவில்
    பையச் சதிகள்செய் தாயே - அதனிலுமென்
    மையல் வளர்தல் கண்டாயே - அமுத மழை
    பெய்யக் கடைக்கண்நல் காயே - நினதருளில்
    உய்யக் கருணைசெய் வாயே - பெருமை கொண்டு
    வையந் தழைக்கவைப் பேனே - அமரயுகஞ்
    செய்யத் துணிந்துநிற் பேனே - அடியெனது
    தேனே! என்திரு கண்ணே - எனையுகந்து
    தானே! வருந் திருப் - பெண்ணே

No comments:

Post a Comment