Wednesday, October 5, 2016

தெய்வப் பாடல்கள் - காளிப்பாட்டு

காளிப்பாட்டு

    யாதுமாகி நின்றாய் - காளி! எங்கும் நீநி றைந்தாய்,
    தீது நன்மை யெல்லாம் - காளி! தெய்வ லீலை யன்றோ?
    பூத மைந்தும் ஆனாய் - காளி! பொறிக ளைந்தும் ஆனாய்
    போத மாகி நின்றாய் - காளி! பொறியை விஞ்சி நின்றாய்.

    இன்பமாகி விட்டாய் - காளி! என்னுளே புகுந்தாய்?
    பின்பு நின்னை யல்லால் - காளி! பிறிது நானும் உண்டோ?
    அன்ப ளித்து விட்டாய் - காளி! ஆண்மை தந்துவிட்டாய்,
    துன்பம் நீக்கி விட்டாய் - காளி! தொல்லை போக்கிவிட்டாய்.

No comments:

Post a Comment