வண்டிக்காரன் பாட்டு
(அண்ணனுக்கும் தம்பிக்கும் உரையாடல்)
''காட்டு வழிதனிலே-அண்ணே!
கள்ளர் பயமிருந்தால்?''எங்கள்
வீட்டுக் குலதெய்வம்-தம்பி
வீரம்மை காக்குமடா!'' 1
''நிறுத்து வண்டி யென்றே-கள்ளர்
நெருங்கிக் கேட்கையிலே''-''எங்கள்
கறுத்த மாரியின் பேர்-சொன்னால்
காலனும் அஞ்சுமடா!'' 2
No comments:
Post a Comment